தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் நிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

6 hours ago 2

சென்னை,

தமிழக அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களுடன் கடந்த ஒரு வாரமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் நிலை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டம்-ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள், சாதி, மத மோதல்கள், வன்முறைகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article