‘தமிழகத்தில் இன்னொரு மொழிப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ - முதல்வர் ஸ்டாலின்

2 hours ago 2

சென்னை: “ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். வடக்கின் ஆதிக்கத்துக்கு வால் பிடிக்கும் அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி கேட்கின்ற முதல் கேள்வி, ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக்கொண்டிருக்கும்போது, தமிழகம் மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?’ என்பதுதான்.

Read Entire Article