திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20 சதவீதம் ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாஜகவில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. வேண்டாம் திமுக; இனியும் வேண்டாம் என்பதுதான் எங்களது கோஷம். எங்கள் கூட்டணி குறித்து மட்டுமே ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.