சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: கைத்தறித்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமாரும், பால் உற்பத்தியாளர் மற்றும் பால் பண்ணை மேம்பாடு ஆணையரகத்தின் ஆணையராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டுள்ளனர். வினித் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார்.