சென்னை: தமிழகத்தில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இளைஞர்கள் வேலைக்கேற்ற திறனைப் பெறவும் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்கவும் தமிழகத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்பட்டு வருகின்றன.