தமிழகத்தில் 1,000 தடுப்பணைகள் கட்ட திட்டம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

6 months ago 18

தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அணை கட்ட முடியாத நிலையில் தடுப்பணை கட்டுவதன் மூலம் அப்பகுதியில் நீராதாரத்தை பெருக்க முடியும். ஏற்கெனவே 500 தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டில் 1,000 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்’’ என்றார்.

Read Entire Article