தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,287 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

7 months ago 20

ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,287 கிலோ பீடி இலைகளை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக கடற்பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் வழியாக, இலங்கைக்கு தொடர்ச்சியாக பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று (நவ.4) மாலை தலைமன்னார் அருகே கீரி கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த 40 மூட்டைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில், நனைந்த நிலையில் 1,287 கிலோ பீடி இலைகள் இருந்தன.

Read Entire Article