வாணியம்பாடி: “தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். அதை பிஹார் மாநிலத்தவர் வந்துதான் செல்ல வேண்டுமா? அவர் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள் கட்டமைப்பை மறுசீராய்வு செய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று (பிப்.26) நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது, “தமிழக அரசியலில் ஊழல் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. பிரசாந்த் கிஷோர் பிஹாரில் இருந்து வந்து நம்முடைய மாநிலத்தில் ஊழல் இருப்பதை சொல்ல வேண்டிய தேவையில்லை. ஊழலில் இருப்பது தெரிந்தும் எதற்கு இங்கு வேலை செய்ய வேண்டும்.