சென்னை: தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்யக் கோரி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என கிராம சபை உறுப்பினர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில் கூறியிருப்பதாவது: மார்ச் 22, உலக தண்ணீர் நாளை முன்னிட்டு (World Water Day)) 29.03.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள் பட்டியலை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. அவற்றில் முதலாவதாக “பொருள் 1: உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்” என்பது அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ‘நீர் நிலைகளை காக்க 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.