தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு: டெல்டாவில் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

3 months ago 17

தஞ்சாவூர் / சென்னை: டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை, டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள், 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிர்கள், நாகை மாவட்டத்தில் 5,800 ஏக்கர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 12 ஏக்கரில் வெற்றிலை தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Read Entire Article