தமிழக விசைப்படகு ஓட்டுநரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

2 months ago 12

ராமேசுவரம்: இலங்கையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த தமிழக விசைப்படகு ஓட்டுநரை, யாழ்பாணம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகுகளின் ஓட்டுநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை அரசு தொடங்கியது. அந்த வகையில், 22.06.2024 அன்று ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றிய இலங்கை கடற்படை, காளீஸ்வரன் என்ற படகு ஓட்டுநரையும், முருகானந்தம், முத்துக்குமார், சீமோன், ராஜ், புருக்லீன், சர்ப்ரசாதம் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தது.

Read Entire Article