தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

4 months ago 15

நாகை: தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இன்று (நவ.12) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (நவ.12) நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article