தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

4 months ago 24

மதுரை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறும் ஒன்றாகிவிட்டது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த, இந்திய கடற்படை கப்பல், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும்.

Read Entire Article