சென்னை: பள்ளி வளாகங்களில் பாலியல் தொந்தரவு செய்பவர்கள் மீது பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ஈரோடு, சிவகங்கை உட்பட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகின.