‘தமிழக சட்டப்பேரவையில் நாங்கள் செங்கோலை நிறுவுவோம்’ - தமிழிசை சவுந்தரராஜன்

3 hours ago 1

கோவை: “மும்மொழி கொள்கை விவாகரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அறிவாலயத்தில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது என கூறிக்கொண்டு அச்சத்துடன் நடமாடுகின்றனர். செங்கலை அகற்றுவது மட்டும் அல்ல சட்டப்பேரவையில் செங்கோலையே நாங்கள் நிறுவுவோம்.” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நோக்கி பாஜக வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசாக உள்ளது.தற்போது மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளனர்.

Read Entire Article