ஓசூர்: மராட்டிய மொழி பேசவில்லை என நடத்துநரை தாக்கியதைக் கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக்கட்ட எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்தும் கன்னட அமைப்பினர் கர்நாடகவில் இன்று முழு கடை அடைப்பு அறித்துள்ளதால் இரு மாநில போலீஸார் பாதுகாப்புடன் தமிழக பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மராட்டிய மொழி பேசவில்லை எனக் கூறி கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநரை அங்குள்ள மராட்டிய அமைப்பினர் தாக்கினர். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இது மொழி பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.