தமிழக கடல் பரப்பில் 500 மெகாவாட்  திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்: தமிழக அரசு தகவல்

4 months ago 20

சென்னை: “தமிழகத்தில் கடல் பரப்பில் 500 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு டெண்டர் விடப்படும்,” என்று மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின் கூறினார்.

இந்தியாவின் முதன்மையான காற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான ‘விண்டர்ஜி இந்தியா 2024’, சென்னை வர்த்தக மையத்தில் இன்று (அக்.23) தொடங்கியது. இந்திய காற்று விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் பிடிஏ வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article