தமிழக – இலங்கை மீனவர்கள் வவுனியாவில் இன்று ஆலோசனை: பல்வேறு பிரச்னைகள் குறித்து முக்கிய பேச்சு

13 hours ago 1

ராமேஸ்வரம்: இலங்கை வவுனியாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இலங்கை கடற்படை இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள வவுனியாவில் இன்று தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ், சுரேஷ் (நாகை மாவட்டம்) ஆகியோர் கொண்ட 6 பேர் குழு நேற்று விமானம் மூலமாக புறப்பட்டு இலங்கை சென்றடைந்தனர்.இலங்கை தரப்பில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

The post தமிழக – இலங்கை மீனவர்கள் வவுனியாவில் இன்று ஆலோசனை: பல்வேறு பிரச்னைகள் குறித்து முக்கிய பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article