செம்பனார்கோயில், ஜூன் 6: கோடை மழை பெய்து முடிந்துள்ள நிலையில் செம்பனார்கோவில் பகுதியில் செங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணியில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் தயாரிக்க கோடைகாலம் தான் ஏற்ற காலமாகும். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் செங்கல் தயாரிக்கும் பணியில் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறியதாவது: கோடைகாலத்தில் அதிகமானோர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணுடன், ஆற்றிலிருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்தி, அச்சுகளில் வார்த்து எடுத்து சுமார் 6 நாட்கள் வெயிலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம். செங்கற்கள் நன்கு சுட்டு விற்பனைக்கு தயாரான நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறினர்.
The post செம்பனார்கோவில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.