தனியார் வாகனங்களை வாடகை டாக்சியாக இயக்க தடை சிஐடியு கோரிக்கை

4 months ago 16

நாகர்கோவில், டிச.10 : குமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) மாவட்ட பேரவை கூட்டம், தலைவர் பொன் சோபனராஜ் தலைமையில் நடந்தது. சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், கூட்டத்தை தொடங்கி வைத்தார். தனியார் வாகனங்களை வாடகை டாக்சியாக பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பெர்மிட்டுக்கு புறம்பாக, குமரி மாவட்டத்துக்கு கொண்டு வந்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு பி.எப். பிடித்தம் செய்யப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க செயலாளர் பிரமோனந்த், நிர்வாகிகள் பரமசிவன், ஆசீர், ஜார்ஜ், வில்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வும் நடந்தது. இதில் தலைவராக பகவதியப்பன், பொது செயலாளராக பரமசிவன், பொருளாளராக ஆசீர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

The post தனியார் வாகனங்களை வாடகை டாக்சியாக இயக்க தடை சிஐடியு கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article