சென்னை: சென்னை அண்ணா சாலை ரங்கூன் தெருவை சேர்ந்தவர் சூசைராஜ் (58), தனியார் நிறுவன அதிகாரி. இவர், கடந்த 3ம் தேதி மனைவியுடன் திருச்சி சென்றிருந்தார். பெரம்பூரில் உள்ள மகளிர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சூசைராஜ் மனைவி, பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக, நேற்று காலை வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றார்.
அப்போது, 100 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். சூசைராஜ் திருச்சி சென்ற போது வீட்டில் 2 மகன்கள் மட்டும் இருந்துள்ளனர். வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வராத நிலையில் நகைகள் மட்டும் மாயமானதால் சந்தேகடைந்த சூசைராஜ், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
The post தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 100 பவுன் கொள்ளை? appeared first on Dinakaran.