சென்னை: தண்டவாள பணி காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1.15 மாலை 5.15 வரை பணிகள் நடப்பதால் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்தது. சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
The post தண்டவாள பணி காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.