சென்னை: அடுக்குமாடி கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒப்புதல் பெறும் முன் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டிடங்கள் அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்த அரசின் இரு குழுக்கள் அளித்த அறிக்கையை ஏற்று, கடந்த நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி, தீயணையணைப்பு துறை தடையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அரசானையை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அதிகாரி எம்.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தடையில்லா சான்றை தனியார் மூலம் வழங்கலாம் என்பது சட்டவிரோதமானது. தீயணைப்பு துறை தான் ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
தனியார் மூலம் வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று புதிய நடைமுறைகளின் படி 3 ஆண்டுகளுக்கு செல்லும் என்பது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post தடையில்லா சான்று வழங்குவதற்கான அரசாணையை எதிர்த்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: தடை விதிக்க மறுத்து உத்தரவு appeared first on Dinakaran.