தஞ்சாவூர், டிச.2: தஞ்சையில் கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கண்திறந்த யோக நரசிங்கப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நேற்று கார்த்திகை மாத 3வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மூலவர் யோக நரசிங்கப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில், யோக நரசிங்கப் பெருமாள் கண்திறந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கண் திறந்த காட்சி அளித்த யோக நரசிங்கப் பெருமாளை தரிசனம் செய்தனர்.
The post தஞ்சையில் கண் திறந்த யோக நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் appeared first on Dinakaran.