தஞ்சாவூரிலிருந்து மானாமதுரைக்கு 2,000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

2 months ago 11

 

தஞ்சாவூர், நவ. 19: தஞ்சாவூரில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதி அரவை ஆலைகளுக்கும், இங்கு அரவை செய்யப்படும் அரிசி பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுவிநியோகத்திட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர், சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2000 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, அரவைக்காக மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

The post தஞ்சாவூரிலிருந்து மானாமதுரைக்கு 2,000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article