
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையாகி வந்தது.
இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.71,600-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 72,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.