தங்க நாணயம், வெள்ளி தருவதாக தீபாவளி சீட்டு நடத்தி 132 பேரிடம் ₹16.68 லட்சம் மோசடி

6 months ago 20

புதுச்சேரி, டிச. 8: தீபாவளி சீட்டு நடத்தி 132 பேரிடமட் ₹16.68 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் கீதா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இவர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீபாவளி நகை பண்டு சீட்டு நடத்தி வந்துள்ளனர். இந்த தீபாவளி சீட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது 2 கிராம் தங்க நாணயம், 10 கிராம் வெள்ளி மற்றும் ₹3 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பி கரசூர் பகுதியை சேர்ந்த சாந்தி உள்பட அப்பகுதியை சேர்ந்த 132 பேர், கீதாவிடம் தீபாவளி சீட்டு கட்டி உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்தும், சீட்டு கட்டியவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயம், 10 கிராம் வெள்ளி மற்றும் ₹3 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்காததால், பாதிக்கப்பட்டவர்கள் கீதாவின் வீடுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது சில தினங்களில் தீபாவளி பொருட்களை தருவதாக கூறியுள்ளார். இதனைநம்பி சீட்டு கட்டியவர்கள் சில நாட்கள் கழித்து, அவரது வீட்டுக்கு சென்று பார்த்துபோது வீடு பூட்டிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சீட்டி கட்டிய 132 பேரும் ₹16.58 லட்சத்தை கீதா, புருஷோத்தமனிடம் ஏமாந்துள்ளனர். தொடர்ந்து தம்பதி இருவரும் தலைமறைவாகி விட்டனர். பின்னர் இதுகுறித்து சாந்தி சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து, தலைமறைவான தம்பதியை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post தங்க நாணயம், வெள்ளி தருவதாக தீபாவளி சீட்டு நடத்தி 132 பேரிடம் ₹16.68 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article