மற்ற மாவட்டங்களில் போலீஸார் அப்படி இப்படி இருந்தாலும் தலைநகர் சென்னையில் பணியாற்றும் போலீஸார் கூடுதல் எச்சரிக்கையுடனும் முன் ஜாக்கிரதையுடனும் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் உடனடியாக தலைமையிடத்தின் கவனத்துக்கு சென்று அதிரடி நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, இப்போது தலைநகர் போலீஸார் தான் வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல், தகாத உறவு என அனைத்துவிதமான சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு கைதாகி காவல்துறையை களங்கப்படுத்தி வருகிறார்கள்.