சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது .
இந்த கூட்டத்தில் த.வெ.க. கட்சிக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் , தவெக மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது, லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
முன்னதாக கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .