டெல்லியில் இம்மாத இறுதியில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது

1 day ago 2

சென்னை,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். பத்ம விருதுகள் இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த சூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.

இதன்படி தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் டெல்லியில், இம்மாத இறுதியில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது. நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை பெற உள்ளார்

பத்மபூஷன் விருதுகள்:

பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

1. நல்லி குப்புசாமி

2. கலைத் துறையில் அஜித் குமார்

3. சோபனா சந்திரசேகர்

பத்ம ஸ்ரீ விருதுகள்:

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட 113 பேரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

1. கலைத்துறையில் குருவாயூர் துரை,

2. புரிசை கண்ணப்பா சம்பந்தன்,

3. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி,

4. வேலு ஆசான்,

5. விளையாட்டுத் துறையில் அஸ்வின்,

6. தொழில்துறையில் ஆர்.ஜி.சந்திரமோகன்,

7. கல்வித்துறையில் லட்சுமிபதி ராமசுப்பையர்,

8. சீனி விஸ்வநாதன்,

9. அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் ஏ.டி. ஸ்ரீனிவாஸ்,

10. மற்றவை சமையல் (Others culinary) பிரிவில் தாமோதரன்

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தட்சணாமூர்த்திக்கு கலைப்பிரிவில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது 

Read Entire Article