
புதுடெல்லி,
பிரதமர் மோடி டென்மார்க் பிரதமர் மேட் பிரெடரிக்சன்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளிடையே இருதரப்பு உரவுகள், மூலோபாய கூட்டாண்மை முக்கியத்துவம் தொடர்பாக விவாதித்தார்.
இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டென்மார்க் பிரதமருடன் பேசியதில் மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.