டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

5 months ago 32
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும். உரிய நேரத்தில் மருத்துவர்களை அணுகாமல் தாமதமாக சென்று சிகிச்சை பெறுவது, வீட்டிலேயே தன்னிச்சையாக சிகிச்சை பார்த்துக் கொள்வது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, கிண்டியில் உள்ள அரிமா சங்க லேபர் காலனி உயர்நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் நடத்தும் இதய மற்றும் பொது மருத்துவ இலவச பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Read Entire Article