நத்தம், ஏப். 29: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி-நல்லகண்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (44). கூலித் தொழிலாளி. இவர் தனது டூவீலரில் சமுத்திராபட்டிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். விநாயகபுரம் பகுதியில் சென்றபோது எதிரே சிறுகுடியை சேர்ந்த மனோஜ் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் கணேசன் மீது மோதியது.
இதில் இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் காலில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டூவீலர் விபத்தில் தொழிலாளி காயம் appeared first on Dinakaran.