டூவீலர் மீது கார் மோதி முதியவர் பலி

6 months ago 24

கிருஷ்ணகிரி, அக்.15: கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (60). இவர் டூவீலரில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, நமாஸ்பாறை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தாலுகா போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article