டூவீலர் திருட்டு

3 months ago 15

சேலம், அக்.29: சேலம் கன்னங்குறிச்சி சின்னபொன்னு தெருவைச் சேர்ந்தவர் தர். இவரது மகன் சியாம்சுந்தர் (29). இவர் கடந்த 11ம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் சென்று பார்க்கும் போது, வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சியாம்சுந்தர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article