டூவீலரில் லாரி மோதல்; மருந்து விற்பனை பிரதிநிதி பலி

1 month ago 8

திருச்சி, மே 30:திருச்சியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ் ணன்(45). மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் உறையூர் பகுதியிலுள்ள மேன்சனில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை புத்தூர் நான்கு ரோடு சாலை அருகே தனது டூவீலாில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவிலர் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலரில் லாரி மோதல்; மருந்து விற்பனை பிரதிநிதி பலி appeared first on Dinakaran.

Read Entire Article