டிராக்டரில் சிக்கி தொழிலாளி சாவு

5 months ago 28

கண்டாச்சிபுரம், அக். 9: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஜெயக்குமார்(42). இவர் அதே ஊரை சேர்ந்த கோதண்டம் மகன் முருகன் (60) என்பவரது நிலத்தில் தங்கி பயிர்களை பார்த்துக்கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோதண்டம் டிராக்டரில் உள்ள ரொட்டவேட்டர் போல்ட் உடைந்துவிட்டதாகவும், அதனை சரி செய்யுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அதன்பேரில் ஜெயக்குமார் டிராக்டரில் உள்ள ரொட்டவேட்டரை சரி செய்து கொண்டிருந்தபோது முருகன் கவனக்குறைவாக டாக்டரின் இன்ஜினை ஆன் செய்ததாகவும், அப்போது டிராக்டரில் சிக்கி ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயக்குமாரின் மனைவி பூங்கோதை கொடுத்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிராக்டரில் சிக்கி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Read Entire Article