டிச.26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2 months ago 14

நாகப்பட்டினம், டிச.19: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 26ம் தேதி நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி கலெக்டர் ஆகாஷ் தலைமையில் பிற்பகல் 4 மணிக்கு முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எனவே முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

The post டிச.26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article