சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை கூடுதலாக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பதவிக்கும் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 1-ல் 70 பணியிடங்களுக்கும் குரூப் 1 ஏ-ல் 2 பணியிடங்களை நிரப்பவும் தேர்வு நடைபெறுகிறது.
The post டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்..!! appeared first on Dinakaran.