டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்

1 day ago 7

கோவை,

9-வது டி.என்.பி.எல். போட்டி நாளை ( வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் ஜூலை 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் , திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்டு சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்று 29-ந்தேதியுடன் முடிகிறது. ஜூலை 1-ந்தேதி குவாலிபையர்1' ஆட்டமும், 2-ந்தேதி எலிமினேட்டர் போட்டியும், 4-ந்தேதி குவாலிபையர்2' ஆட்டமும், இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதியும் நடைபெறுகிறது.கோவையில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Read Entire Article