“டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை” - அமைச்சர் ரகுபதி விளக்கம்

1 month ago 10

சென்னை:“டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு எதற்கு மாற்ற வேண்டும் திமுகவுக்கு பயமா? என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியிலே கணமுமில்லை, வழியிலே பயமுமில்லை. டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கோரி இருக்கிறோம். வேறு மாநிலத்தில் வைத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. இதை எதிர்கட்சித் தலைவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

Read Entire Article