டாஸ்மாக் வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு - காரணம் என்ன?

1 month ago 11

சென்னை: அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

Read Entire Article