சென்னை: டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மது விற்பனையில் 40 சதவீதம் கணக்கில் காட்டப்படவில்லை என்பதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், ஊழல் பணம் ரூ.1,000 கோடியில் சிறு பகுதி மட்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்குச் சென்றது என்பது குறித்து விசாரணை நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.