டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு: எம்.பி சு.வெங்கடேசன் பேச்சு

1 hour ago 1

புதுடெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாத்தில் பேசிய, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், டங்கஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது: “மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க சதித் திட்டத்தை முறியடித்த பெருமையோடு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். மதுரை மாவட்டத்தின் மேலூர் ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

Read Entire Article