மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடப்படுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களிடம் நேற்று பேசிய அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தெரிவித்தோம். இந்த திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பிறகும் போராட்டம் தொடர்வதால், மக்களை சந்திக்கவந்துள்ளோம்.