டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: நவ.28-ல் போராட்டம் நடத்த 52 கிராம மக்கள் முடிவு

3 months ago 19

மதுரை: அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அழகர்கோயிலில் இன்று 52 கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். அப்போது நவ.28-ல் அ.வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மதுரை மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 2015 ஹெக்டேர் பரப்பில் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தால் இப்பகுதியிலுள்ள தொல்லியல் சின்னங்கள், இயற்கை வளங்கள் அழிந்துவிடும்.

Read Entire Article