டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு: அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்

3 months ago 18

மதுரை: மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில், அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏக்கள் பங்கேற்ற கிராம சபைக்கூட்டங்களிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க நவ.7-ம் தேதி ஏலம் விட்டது. டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முதல் பாரம்பரிய பல்லுயிர் மரபு தலம் அழிந்துவிடும். இங்கு தொல்லியல் சின்னங்கள், சமண படுக்கைகள், தமிழி கல்வெட்டுகள் என தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக்கூறுகள் சேதமடையும்.

Read Entire Article