டங்ஸ்டன் ஏலம் ரத்து: முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடத்த திட்டம்

2 weeks ago 2

மதுரை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிப் பகுதியை சேர்ந்த ஊரின் முக்கிய நபர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை வணிக வரித் துறை அமைச்சரும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது மேலூர் பகுதி விவசாயிகள், நாளை நடக்கும் பாராட்டு விழாக்கு வருமாறு நேரில் அழைப்பு விடுத்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மதுரை வருகிறார். காலை சென்னையில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பங்கேற்றுவிட்டு தனி விமானம் மூலம், மதுரை வருகிறார். அவர் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி மக்கள், விவசாயிகளை சந்திக்கிறார்.

Read Entire Article