மதுரை: விடுமுறை நாளில் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படவில்லை.
புதிதாக வீடு, இடம் வாங்குவோர் சுபமுகூர்த்த தினத்தில் கிரயம் பத்திரம் பதிவு செய்ய விரும்புவர். இவர்களின் வசதிக்காகவும், வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும் ஞாயிற்றுக் கிழமையான இன்று தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என, அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.