ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றதால் வீடு ஒதுக்கீட்டு ஆணை: முதல்வர் ஸ்டாலினுக்கு பழங்குடியின மாணவி நன்றி

16 hours ago 5

சேலம் / சென்னை: பொறி​யியல் படிப்​புக்​கான நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்​ளார். சேலம் மாவட்​டம் கல்​வராயன்​மலை​யைச் சேர்ந்த கரு​மந்​துறை அரசு பழங்​குடி​யினர் உண்டு உறை​விட மேல்​நிலைப் பள்​ளி​யில் பயின்ற ஆ.ராஜேஸ்​வரி என்ற பழங்​குடி​யின மாண​வி, அண்​மை​யில் நடை​பெற்ற ஜேஇஇ தேர்​வில் அகில இந்​திய அளவில் 417-வது இடத்​தில் தேர்ச்சி பெற்​று, சென்னை ஐஐடி​யில் பயில தகுதி பெற்​றுள்​ளார்.

ஏழைக் குடும்​பத்​தைச் சேர்ந்த இம்​மாண​வி​யின் தந்தை 2023-ல் இறந்​து​விட்​டார். தாயார் கவி​தா, அக்கா ஜெகதீஸ்​வரி, அண்​ணன் கணேஷ் ஆகியோ​ருடன் கரு​மந்​துறை மலைப் பகு​தி​யில் வசித்து வரும் மாணவி ஆ.ராஜேஸ்​வரி, பழங்​குடி​யின நலத் துறை​யின் சிறப்பு வகுப்​பு​களி​லும், ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை​யில் செயல்​பட்டு வரும் அரசு பயிற்சி மையத்​தி​லும் சேர்ந்து உயர்​கல்வி நுழைவுத் தேர்​விற்கு தயா​ரானது குறிப்​பிடத்​தக்​கது.

Read Entire Article